சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த, மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவுத் தூண் மாதிரி வடிவமைப்பிற்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உழைப்பாளர்கள் தினம் குறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள் - செவிலியர்கள் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.